திருநெல்வேலி:நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை எல்.எஸ்.மகாலில் வைத்து வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி இன்றி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.