சென்னை: மடிப்பாக்கத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்றதாகக் கூறி, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை குட்டி பத்மினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.