தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குஷ்பூவை சோஷியல் மீடியாவ செக் பண்ண சொல்லுங்க.. கனிமொழி எம்பி சாடல்! - MP Kanimozhi on Fishersmen arrest - MP KANIMOZHI ON FISHERSMEN ARREST

MP Kanimozhi on Fishermen Arrest: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்பதில் சில சட்ட சிக்கல் உள்ளது, எனவே இது குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தூத்துக்குடியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திறந்து வைத்த எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

எம்.பி கனிமொழி
எம்.பி கனிமொழி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 4:15 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி, சுந்தரவேல் புரம் 2வது தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிட திறப்பு விழா இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி எம்.பி கனிமொழி செய்தியாளர் சந்திப்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேற்கு வங்க மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து கருத்து கூறி இருக்கின்றேன். நான் மௌனம் சாதிக்கவில்லை. இதுகுறித்து நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு நான் கருத்து கூறவில்லை என்று கூறுகிறார், அவரை முதலில் சமூக வலைத்தளத்தில் செக் பண்ண சொல்லுங்க” என்றார்.

மேலும், தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்கள் இலங்கையில் சிறையில் இருப்பது குறித்த நடவடிக்கை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சரிடம் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் எம்பிக்கள் மனு அளித்துள்ளோம். இங்கே இருக்கக்கூடிய பிரச்னைகளைச் சொல்லி இருக்கின்றோம். அவர்களை மீட்பதில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றது.

அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். தொடர்ந்து முதலமைச்சரும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். மேலும், படகுகளை விடுவிப்பதில், இலங்கை நாடாளுமன்றம் ஒரு சட்டம் கொண்டு வந்து அதை தேசியமயமாக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுவதற்கு ஏதாவது வழிவகை செய்தால் தான் படகுகளை எளிதாக விடுவிக்க முடியும். அதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:இலங்கை கடற்படை கைது.. தூத்துக்குடி மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details