தமிழ்நாடு

tamil nadu

பயன்படுத்தப்படாத குவாரியை சுற்றி வேலி அமைக்க எவ்வளவு காலம் ஆகும்? - அரசு பதிலளிக்க உத்தரவு - High Court Madurai Bench

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 8:50 AM IST

மதுரை யானைமலை அடிவாரத்தில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள குவாரியை சுற்றி வேலி கம்பி அமைக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கில், வேலி அமைத்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (File Image) (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை:மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை ஒத்தக்கடை யானைமலை அடிவாரத்தில் பழமையான நரசிங்கம் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கல்குவாரி அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பல ஆண்டுகளாகச் செயல்படாத பல கல்குவாரிகள் உள்ளன.

இந்த கல்குவாரிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. கடந்த ஆண்டில் இங்கு 2 பெண்கள் விழுந்து பலியாகியுள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி, யானைமலை அடிவாரத்தில் செயல்படாமல் உள்ள குவாரியைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, போலீசார் கண்காணிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நாளை மறுநாள் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு.. தடைக்கோரிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "பயன்படுத்தப்படாத குவாரியை சுற்றி கம்பி வேலி அமைப்பதற்காக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து பேசிய நீதிபதிகள், "பயன்படுத்தப்படாத குவாரியை சுற்றி கம்பி வேலி அமைத்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும்?" என்பது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details