சென்னை: மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 11 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் செவிலியர்களுக்கு 270 நாட்களுக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து, எம்ஆர்பி செவிலியர் அதிகாரமளித்தல் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் செவிலியர்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க முடியாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.