தமிழ்நாடு

tamil nadu

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் விவகாரம்; தொல்லியல் நிபுணர் குழு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு! - vallalar international center

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 3:38 PM IST

vallalar international center: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

vallalar international center
vallalar international center

சென்னை:வடலூரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ள சத்தியஞான சபை முன், 99 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சர்வதேச மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ள 16 வசதிகளை விளக்கி, தமிழ்நாடு அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாகவும், அதில் 17 – 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் எச்சங்கள் மட்டும் கண்டறியப்பட்டதாகவும், அந்தப் பகுதியில் எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை என்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.

மேலும் அவர், பணியின் போது ஏதேனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் அவை பாதுகாக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்தார். தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தால் தான் முறையாக இருக்கும் என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை வழக்கறிஞர், மூன்று பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தொல்லியல் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: "கொத்துக் கொத்தாக வாக்குரிமை பறிப்பு.. திமுக மௌனம் சாதிப்பது ஏன்?" - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு! - Tamilisai Soundararajan

ABOUT THE AUTHOR

...view details