தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் விவசாய நிலங்கள் பாதுகாப்பு; அறநிலையத்துறை அறிக்கை அளிக்க உத்தரவு! - HRCE agricultural land case - HRCE AGRICULTURAL LAND CASE

HRCE agricultural land case: கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 10:48 PM IST

சென்னை:தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில், கோயில்களுக்குச் சொந்தமாக 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அவற்றை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலங்கள் குறித்த அனைத்து தகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாய நிலங்களை பொறுத்தவரை குத்தகை காலம் முடிந்ததும், அவற்றை மீட்டு மீண்டும் டெண்டர் மூலம் குத்தகைக்கு விடப்படுவதாகவும் அறநிலையத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து, குத்தகை காலம் முடிந்த பின் நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் மீட்டு, மீண்டும் குத்தகைக்கு வழங்குவதற்கு கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:“அமலாக்கத்துறை காவலில் துன்புறுத்தப்பட்டீர்களா?” - ஜாபர் சாதிக் நீதிமன்றத்தில் பதில்! - JAFFER SADIQ ED Case

ABOUT THE AUTHOR

...view details