தமிழ்நாடு

tamil nadu

சேலம் ராமர் பாதம் கோயில் விவகாரம்: தாசில்தார் உத்தரவுக்கு இடைக்காலத் தடை - Salem Ramar temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 3:22 PM IST

Salem Ramar temple: மத்திய அரசின் குத்தகை நிலத்தில் இருக்கும் சேலம் ராமர் பாதம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள தாசில்தார் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்(கோப்புப் படம்)
சென்னை உயர் நீதிமன்றம்(கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சேலம் மாமாங்கம் பகுதியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் செயில் ரீபேக்டரி என்ற அரசு நிறுவனம் அப்பகுதியின் சில நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் குத்தகைக்கு எடுத்த நிலத்தில், தொன்மையான ராமர் பாதம் உள்ள கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு செல்ல பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அந்நிறுவனம் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்பகுதியின் சில குழுக்கள் செயில் நிறுவனத்துடன் பிரச்சனைகள் செய்து வந்தாகவும், இதனால் அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏறபட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள், செயில் நிறுவனம் தரப்பும் இடையே அமைதி பேச்சுவார்த்தையை அப்பகுதி தாசில்தார் முன்னிலையில் கடந்த மே மாதம் நடத்தினார். அதில், நிறுவனத்தின் முன் பக்க வாயிலை அகற்ற வேண்டும் அல்லது பக்தர்கள், பொதுமக்கள் ராமர் கோயிலுக்கு எந்த வித தடையும் இல்லாமல் செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என செயில் நிறுவனத்திற்கு தாசில்தார் அறிவுறுத்தல்களை வழங்கி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இதை எதிர்த்து செயில் ரீபேக்டரி நிறுவன தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, தாசில்தார் நடத்திய அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பான செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய தாசில்தாருக்கு உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு.. மெயின்ஸ் தேர்வு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details