சென்னை: கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுக - அதிமுகவினரிடையே நடந்த மோதலில், பெரியகருப்பன் உள்பட எட்டு திமுகவினர் மீது திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பெரிய கருப்பன் சார்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆஜராகி, சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் இல்லை என்றும், இவருக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிட்டார்.