தமிழ்நாடு

tamil nadu

ரூ.10 கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை; விற்பனையாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை! - Vellore Tasmac Raid

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 9:34 PM IST

Vellore Tasmac Raid: வேலூரில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 2 பேரை திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

டாஸ்மாக் மதுபான கடை - கோப்புப் படம்
டாஸ்மாக் மதுபான கடை - கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து சேலம் மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மேலாளர், கிருஷ்ணகிரி மாவட்ட உதவி மேலாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மற்றும் அணைக்கட்டு வட்டங்களில் செயல்படும் அரசு மதுபான கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 11335 பணியாற்றி வரும் மேற்பார்வையாளர் ஜெகநாத மூர்த்தி மற்றும் விற்பனையாளர் ராஜேஷ் ஆகியோர் 10 ரூபாய் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெகநாத மூர்த்தி மற்றும் விற்பனையாளர் ராஜேஷ் ஆகியோரை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

மேலும் ஐந்து ரூபாய் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த புகாரின் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் 17 விற்பனையாளர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதேபோல் மதுபான சில்லரை விற்பனைக் கடைகளிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில் டாஸ்மார்க் ஊழியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:வேலூர்: வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி விற்பனை செய்த 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details