தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3000 கிலோ கெட்டுப்போன பஞ்சாமிர்தம்! லாரியை சிறைபிடித்த இந்து அமைப்பினர்! பழனியில் பரபரப்பு! - palani temple panchamirtham Issue

Palani Panjamirtham Issue: பழனி பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்திலிருந்து சுமார் ஒரு கேன்களுக்கு 50 கிலோ விதம் 66 கேன்கள் மூலமாக கெட்டுப்போன பஞ்சாமிர்தங்களை லாரியில் கொண்டு சென்றதாகக் கூறி, பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் லாரியை தடுத்து நிறுத்தி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்த இந்து அமைப்பினர்
கெட்டுப்போன பஞ்சாமிர்தம் ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்த இந்து அமைப்பினர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 11:23 AM IST

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்த இந்து அமைப்பினர்

திண்டுக்கல்:முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில் நிர்வாகம் சார்பில், மலை அடிவாரம் பகுதியில் இருக்கக்கூடிய கடையில் விற்பனை செய்யப்படும் லட்டு, முறுக்கு, அதிரசம், உள்ளிட்ட பொருட்கள் கெட்டுப் போனதாகவும், பூசனம் பிடித்தும், பஞ்சாமிர்தம் குறிப்பிட்ட தேதி முடிந்த பின்பும், விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தலைமையில் அதிகாரிகள் 7 பேர் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், பழனி அறங்காவல் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் கோயில் இணை ஆணையர் பஞ்சாமிர்தம் தயாரிப்பு கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு, பழனி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் தரமாக உள்ளது. பஞ்சாமிர்த தயாரிப்பு தேதி அச்சிடப்பட்டுள்ள தேதியில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் வரை வைத்து பக்தர்கள் பயன்படுத்தலாம்.

50 ஆயிரம் பஞ்சாமிர்த டப்பாக்கள் ஸ்டாக் இருப்பதாகத் தவறான தகவல் அளிக்கப்படுபவர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருமான நோக்கத்துடன் கோயில் நிர்வாகம் செயல்படவில்லை சேவை நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறது என்று பழனி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (மார்ச் 12) காலை பழனி மலை அடிவாரத்தில் உள்ள பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்திலிருந்து சுமார் ஒரு கேன்களுக்கு 50 கிலோ விதம் 66 கேன்கள் மூலமாக சுமார் 3 ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள கெட்டுப்போன பஞ்சாமிர்தங்களை லாரியில் கொண்டு செல்லும் போது, பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் லாரியை தடுத்து நிறுத்தி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி பஞ்சாமிர்தம் லாரியை அடிவாரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கோசாலையில், வைத்து அழிப்பதற்காக கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தங்கள் பஞ்சாமிர்தங்களை வெளியில் கொண்டு செல்வதன் நோக்கம் என்ன என்பது குறித்த விளக்கத்தை கோயில் நிர்வாகம் அளிக்க வேண்டும் என இந்து அமைப்பினர் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:"கணவரின் தற்கொலை முயற்சிக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம்" - திண்டுக்கல் பெண்ணின் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details