மதுரை:சொர்க்கவாசல் (Sorgavaasal) திரைப்படத்தை Amazon போன்ற ஓடிடி பொது ஊடகங்களில் வெளியிடத் தடை விதிப்பதோடு, சொர்க்கவாசல் படத்தின் வெளியீட்டாளர், இயக்குநர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அலுவலர், தமிழ்நாடு அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த நவம்பர் மாதம் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'சொர்க்கவாசல்' என்ற திரைப்படம் வெளியானது. இதில், முக்கிய கதாபாத்திரத்திற்கு கட்டபொம்மன் எனப் பெயர் சூட்டப்பட்டு, நடிகர் கருணாஸ் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மது, போதைப் பொருட்கள் போன்றவற்றை அந்த கதாபாத்திரம் விற்பனை செய்யும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு விடுதலைப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், சொர்க்கவாசல் படத்தில் அவரது பெயர் தவறான செயல்களை செய்யும் கதாபாத்திரத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.