மதுரை:மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட கட்டண படுக்கை சிகிச்சை பிரிவில் சுமார் ரூ.1 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கட்டண படுக்கை சிகிச்சைப் பிரிவுகள், விபத்து மற்றும் சிகிச்சைப்பிரிவில் 8 படுக்கைகளும் (4 Deluxe Room + 4 single room), பன்நோக்கு உயர் சிகிச்சைப் பிரிவில் 8 (3 Deluxe Room + 5 single room) படுக்கைகளுடன் என கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறிப்பிட்ட கட்டண படுக்கை சிகிச்சை பிரிவு ஈட்டி உள்ள வருமானம் குறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஸ் குமார் கூறியிருப்பதாவது, "கட்டண படுக்கை சிகிச்சைப்பிரிவில் தற்போது வரை 919 நோயாளிகள் மற்றும் உடனிருப்போர் பயனடைந்துள்ளனர்.