தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

வால்பாறை அடுத்துள்ள ஊசிமலை தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

உயிரிழந்த சிறுமியை  உறவினர்கள் தூக்கிச் சென்ற புகைப்படம்
உயிரிழந்த சிறுமியை உறவினர்கள் தூக்கிச் சென்ற புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: வால்பாறை அடுத்த ஊசிமலை எஸ்டேட் பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்த் தொழிலாளியான ஐனூல் அன்சாரி என்பவரின் மகள் அப்சர் கத்தூன்(வயது 4) வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக காவல் துறை தெரிவித்துள்ள முதற்கட்டத் தகவலின் படி, வால்பாறை காவல் நிலைய சரகம், ஊசிமலை மட்டம் வாழப்பாடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் கடந்த ஓராண்டாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐனூல் அன்சாரி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதியில் இறப்பு நிகழ்வு என்பதால் தாய் - தந்தை இருவரும் வேலைக்கு செல்லவில்லை.

மதியம் சுமார் 1.30 மணியளவில் வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த சிறுமி அப்சர் கத்தூன் என்பவரை தேயிலைத் தோட்ட புதரில் இருந்து வந்த சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. இதை பார்த்த அவரது தாய் சத்தம் போட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்க்கும் போது சுமார் 700 மீட்டர் புதரில் குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வால்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தையின் உடல் உடற்கூராய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" எனக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details