சென்னை:புதுச்சேரி பாஜகவினர் வாக்கு சேகரிக்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு கண்டணம் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்துவது கீழ்த்தரமான அரசியல் என சாடியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள், வாக்கு கேட்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்துடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்துவது கீழ்த்தரமான அரசியல், இது கண்டனத்திற்குறியது.