தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 10:37 PM IST

ETV Bharat / state

அரசுப் பேருந்து விபத்து.. மதுபோதையில் இருந்த ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை! - govt bus accident in chennai

சென்னை திருவான்மியூரிலிருந்து கிளாம்பாக்கம் சென்ற அரசுப் பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, பேருந்து ஓட்டுநரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திருவான்மியூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து 95 X என்ற தடம் எண் கொண்ட மாநகர பேருந்து இன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு வழக்கம் போல் திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் கலைஞர் பன்நோக்கு பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

தற்போது, ஓஎம்ஆர் சாலையில் தற்போது மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சாலைகள் குறுகலாக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ பள்ளி அருகே பேருந்து வந்த நிலையில், சரக்கு வாகனத்தை முந்தி செல்லும் பொழுது மெட்ரோ பணிக்காக போடப்பட்டிருந்த தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாயுள்ளது.

இதனையடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் மீண்டும் பேருந்தை இயக்கியுள்ளார். இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து, ஓஎம்ஆர் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் பேருந்தை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து, வாகன ஓட்டிகள் இது குறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேட்கும்போது, அரசு பேருந்து ஓட்டுனர் சரவணன் மது போதையில் இருந்ததாக, வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க:திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் செயல் - ஹெச்.ராஜா விமர்சனம்!

அதனைத்தொடர்ந்து, பேருந்து ஓட்டுநரை துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதில், சோதனைக் கருவி கொண்டு போலீசார் நடத்திய ஆய்வில் அவர் மது அருந்தியது உறுதியானது. இதையடுத்து போக்குவரத்து புலனாய்வு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்து போலீசார், ஓட்டுநர் சரவணனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், பேருந்தில் வந்த பயணிகளை மற்றோரு பேருந்துக்கு மாற்றி அனுப்பியுள்ளனர். மேலும், மாநகர அரசுப் பேருந்தை மதுபோதையில் ஓட்டிய ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details