சென்னை:'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், "நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தற்போது தான் மற்ற மாநிலங்களில் இருந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு குரல்கள் வரத் தொடங்கியுள்ளது. நீட் தேர்வு குறித்து மற்றவர்களும் உணர்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த வேளையில் தொடர்ந்து திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். நீட்டிலிருந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அத்தனை பேருக்கும் உள்ளது” என தெரிவித்தார்.
ஒரு நாள்கூட அவர்களால் சபையை நீட்டித்து நடத்த முடியவில்லை. நிச்சயமாக அவர்களால் நடத்தி இருக்க முடியும். ஆனால் அரசாங்கம் முன்வரவில்லை. மணிப்பூர் குறித்தும் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை.