தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 ஆண்டுகளாக விடுப்பா? தொடக்க கல்வித் துறையில் ஒரே வாரத்தில் 4 பேர் சஸ்பெண்ட்! - 4 people suspended - 4 PEOPLE SUSPENDED

மாணவர்களின் கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், தொடக்க கல்வித்துறையில் மட்டும் ஒரே வாரத்தில் திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வி இயக்கக வளாகம்
பள்ளிக் கல்வி இயக்கக வளாகம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 8:47 PM IST

சென்னை:பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் சிலர் தங்களின் சுயநலத்திற்காக குறைவாக மாணவர்கள் இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் காண்பித்து பணிபுரிந்து வருகின்றனர்.

அமைச்சர் அறிவிப்பு: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் தொகுதிவாரியாக அனைத்து பள்ளிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

கல்வி அலுவலர்கள் ஆய்வு:அதன் தொடர்ச்சியாக தற்போது தொகுதிவாரியாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை, ஆய்வு அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.

4 பேர் சஸ்பெண்ட்:தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்ட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, வட்டார கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையும் சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மர்ம சூட்கேஸில் சிக்கிய 14 கிலோ கஞ்சா.. பரபரப்பான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்!

அதனைத்தொடர்ந்து, விழுப்புரம் கோலியனூர் வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை விட கூடுதலாக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கி நியமனம் செய்த கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து நேற்று தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

8 ஆண்டுகளாக விடுப்பு? இந்நிலையில், செங்கல்பட்டு திருப்போரூர் கல்வி வட்டத்திற்குட்பட்ட முள்ளிப்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் பார்த்திபனை சஸ்பெண்ட் செய்து செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வின்போது ஆசிரியர் பார்த்திபன் பணியில் இல்லாததும், முன் அனுமதி இன்றி நீண்ட காலமாக பள்ளிக்கு வராததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஆசிரியர் 8 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details