கோயம்புத்தூர்:கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்ந்து மொத்தம் 11 உறுப்புக் கல்லூரிகளில் 33 துறைகளில் முதுநிலைப் படிப்பு மற்றும் 28 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த பல்கலைகழகத்தின் 2024-2025 கல்வி ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்பு சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் கடந்த மே 8ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு, ஜூன் 23ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த நுழைவுத் தேர்வுக்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2,881 இளநிலைப் பட்டம் பெற்ற வெவ்வேறு பாடப்பிரிவு படித்து வந்த மாணவ மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கிடையே, விண்ணப்பங்கள் தரப்பட்ட பெரும்பாலான மாணவ, மாணவியர் தங்களது இளநிலை பட்டப்படிப்பு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் முடிய உள்ளது. அதனால் இந்த முதுநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.