சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக. சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான உரை நிகழ்த்தியபோது முக்கியமான சில அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் அவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் நிதியோடு பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படவுள்ளது.
''பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாழும் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு படிக்க கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினமும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.
பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர அவர்கள் 18 வயது அடையும்வரை மாத பராமரிப்பு தொகையாக தலா 5000 ரூபாய் வழங்கப்படும்.