தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளதால் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் கைதான சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "தங்களுக்கும் கொலைச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. ஆதாரங்கள் இல்லாமல் தங்களை இந்த வழக்கில் இணைத்து கைது செய்துள்ளனர் என்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தனர். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், சம்பந்தப்பட்ட மனுதாரர் மூன்று பேரும் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கரமான ஆயுதம் வைத்திருந்தனர். குற்றத்தின் தன்மை கருதி இவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனார். எனவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

அதேபோல், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பல வழக்கறிஞர்களும் தனித்தனியாக வாதிட்டனர். இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், மனுதாரர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர். எனவே, தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு - சென்னை ஐகோர்ட்!

ABOUT THE AUTHOR

...view details