கோயம்புத்தூர்: கடந்த 2017ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாக இந்த வழக்கு மீதான விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை, கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் 9வது குற்றம் சாட்டப்பட்ட நபரான மனோஜ்சாமி என்பவரிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி இருத்தனர்.