மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றங்கரையில் பல்வேறு வகை மரங்கள் அடர்த்தியாக இருந்தன. இவை பல ஆண்டுகளுக்கு முன்பே முழுவதும் வெட்டப்பட்டுவிட்டன. தற்போது சீமைக்கருவேல மரங்கள்தான் அடர்த்தியாக காணப்படுகின்றன.
மேலும், வைகையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. வைகை ஆற்றின் நீர் அசுத்தம் அடைந்து இருப்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க:மாணவனை காலைப் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர் சஸ்பென்ட்...வீடியோ வைரல் ஆன நிலையில் கல்வித்துறை நடவடிக்கை!