திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் நேற்று தபால் மூலம் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் வெடிகுண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சிறுது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராஜா என்பவர் அந்த கடிதத்தை தான் அனுப்பவில்லை, இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.