கோயம்புத்தூர்: உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் நேற்று (ஜன.22) பிரதமர் மோடி தலைமையில், ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் சாதுக்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாட்டில் திமுக மற்றும் பாஜகவினருக்குச் சனாதனம் தொடர்பாக மோதலும் முற்றி வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் உள்ள திமுக சட்ட சீர்திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் அவரது முகநூல் பக்கத்தில், "அயோத்தி ராமர் கோயில் திறப்பு... ராமருக்குப் பிடித்த மாட்டுக்கறி பிரியாணி ரெடி" என்ற சர்ச்சைக்குரிய பதிவு பொள்ளாச்சி நகர பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனால், பாஜக நகரத் தலைவர் பரமகுரு தலைமையில், தென்றல் செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.