தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

BSP தமிழ்நாடு தலைவர் படுகொலை; கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்.. ஆதரவாளர்கள் சாலை மறியல்! - BSP TN UNIT PRESIDENT Armstrong

Bahujan Samaj Party: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த அக்கட்சியின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பெரம்பூர் பகுதி முழுவதும் போலீசின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 10:54 PM IST

ஆம்ஸ்ட்ராங், பா.ரஞ்சித் புகைப்படம்
ஆம்ஸ்ட்ராங் மற்றும் பா.ரஞ்சித் (Credits - Ramadoss 'X' Page and ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, நான்கு பேர் தனியார் உணவு டெலிவரி செய்யும் ஆடையை அணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது அங்கு பட்டாக் கத்தியுடன் வந்த இருவரும், ஏற்கனவே இருந்த நான்கு பேரும் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, ஆறு பேர் கொண்ட கும்பல் தங்களது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எட்டு தனிப்படைகள் அமைத்து தப்பிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தனியார் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் போல் ஆடை அணிந்து, ஒரு கட்சியின் மாநிலத் தலைவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் சென்னையையே உலுக்கி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கட்சியினர் ஆம்ஸ்ட்ராங்கின் வீடு உள்ள பகுதியில் குவிந்து வருகின்றனர். அதேபோல், பெரம்பூர் பகுதியில் உள்ள முக்கியமான சாலைகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள், இந்த கொலைச் சம்பபத்துக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

மேலும், கட்சி மாநிலத் தலைவர் ஒருவரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டதாகவும், இதனை காவல்துறை தடுக்காமல் விட்டதால் தான் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என கூறி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பெரம்பூர் பகுதி முழுவதும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இணை ஆணையர் அபிஷேக் தீக்சித் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடலைப் பார்க்க தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இயக்குநர் பா.ரஞ்சித் கதறி அழுதார். 20 வருடங்களுக்கு மேலாக அரசியல் வாழ்வில் இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங், பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அம்பேத்கர் தொடர்பாக உரைகளை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் படுகொலை; 8 தனிப்படைகள் அமைப்பு.. ஈபிஎஸ், அண்ணாமலை கண்டனம்! - BSP TN Unit President Murder

ABOUT THE AUTHOR

...view details