சென்னை:சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் சாந்தகுமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாந்தகுமார், “நினைவஞ்சலியைத் தொடர்ந்து நினைவேந்தல் கூட்டம் இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. எங்கள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் குமரி முதல் இமயம் வரை போராட்டங்கள் வெடிக்கும்.