சென்னை: இந்திய சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப் பாடல்களுக்கும், படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி என்ற தர்கா உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த தர்காவில் நேற்று (பிப்.26) நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் பங்கேற்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் காரில் வந்திருந்தார். அதன் பின்னர், சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட வந்த அவரைக் காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.