தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்க்கிங்கால் வந்த பிரச்னை; சினிமா பாணியில் பூட்டை உடைத்து தள்ளிச்செல்லப்பட்ட கார்!

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் கார் பார்க்கிங் செய்வதில், இரு வீட்டு நபர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையில், ஒருவரது காரின் பூட்டை உடைத்து ஆட்களை வைத்து மற்றொரு நபர் தள்ளிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

உடைக்கப்பட்ட கார்
உடைக்கப்பட்ட கார் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை : சென்னை சாலிகிராமம் எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் எழில்குமார். இவர் தற்போது வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை கடந்த 2022ம் ஆண்டு இரண்டாம் தரமாக விலைக்கு வாங்கியுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பு பத்திரத்தில், தரைதளத்தில் உள்ள 2 கார் பார்க்கிங்கில் ஒன்று எழில்குமாருக்கு சொந்தம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தரைதளத்தில் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் அருண்குமார் என்பவர் அங்கு தனது காரை நிறுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்திய எழில்குமார், கடந்த ஒரு வருடமாக எனது வீடு காலியாக இருந்ததால் நீங்கள் எனது வீட்டிற்கான பார்க்கிங்கில் உங்களது காரை நிறுத்தினீர்கள். தற்போது வீட்டின் உரிமையாளராக நான் வந்திருப்பதால் இனிமேல் எனது காரை நான் நிறுத்திக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். அதற்கு அருண்குமார் ஒப்புக்கொள்ளாததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பூட்டை உடைத்து தள்ளிச்செல்லப்படும் கார் (Credits - ETV Bharat Tamilnadu)

இதையும் படிங்க :கோவை ரேக்ளா பந்தயத்தின் போது நிகழ்ந்த விபத்தில் வைரல் வீடியோ!

இதுதொடர்பாக அருண்குமார் மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எழில்குமார் புகார் அளித்தார். ஆனால் இது சிவில் விவகாரம் என்பதால் தங்களால் தலையிட முடியாது என போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் 10 பேருடன் வந்து பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் பூட்டை உடைத்து அருண்குமார் தள்ளிச் சென்றதாக மதுரவாயல் துணை ஆணையரிடம் எழில்குமார் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

விருகம்பாக்கம் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரின் தூண்டுதலின் பேரில் தான் அருண்குமார் இப்படி செய்வதாகவும் எழில்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details