தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 4:25 PM IST

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மரணம்; பேரவையில் அமளி... அதிமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றம்! - Kallakurichi Illicit liquor tragedy

AIADMK MEMBERS EVICTED FROM TN ASSEMBLY: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து அதிமுகவினர் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்ட நிலையில், பேரவையிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றபட்டனர்.

சட்டப்பேரவையில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஆர்.பி உதயகுமார்
சட்டப்பேரவையில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஆர்.பி உதயகுமார் (CREDIT -ETVBharat TamilNadu)

சென்னை:நடப்பாண்டிற்கான இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஜூன் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மறைந்த உறுப்பினர் புகழேந்தி, குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் என அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்திய பிறகு பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியான அதிமுக கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முற்பட்டார்.

அப்போது குறுகிட்ட பேரவை தலைவர் அப்பாவு, கேள்வி நேரம் என்பதால் விதிகளுக்கு மாறாக பேச அனுமதிக்க முடியாது எனவும், கவன ஈர்ப்பு தீர்மானம் வரும்போது அனுமதிப்பதாக பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். இருப்பினும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவர் இருக்கை முன்பு பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவை தலைவர் இருக்கை கீழ் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பேரவையிலிருந்து வெளியேற்ற அவை காவலருக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆர்.பி உதயகுமார், தளவாய் சுந்தரம், செந்தில் குமார், சு.ரவி, அக்ரி.எஸ் கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி உள்ளிட்டோரை குண்டுகட்டாக அவை காவலர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றினர். அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதால் சட்டப்பேரவைக்கு வெளியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: கண்ணீரில் கள்ளக்குறிச்சி! 'முதலமைச்சரே ராஜினாமா செய்க..அரசையே சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துக' - ஈபிஎஸ் கடும் தாக்கு - Kallakurichi Illicit liquor tragedy

ABOUT THE AUTHOR

...view details