தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

சென்னையில் ‘செம்பொழில்’ திருவிழா.. கார்த்தியின் முக்கிய ஆசை! - Sempozhil

'செம்பொழில்' என்ற பெயரில் சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா நடைபெறுகிறது, இதனை நடிகரும், உழவன் பவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 'செம்பொழில்' என்ற பெயரில் சென்னையில் ஒரு கிராமத்துத் திருவிழா நடைபெறுகிறது. செப்டம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாள் நடைபெற்று வரும் இந்த விழாவினை நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார். மேலும், அங்கு காட்சிப்படுத்திய நாட்டு மாடு, ஆடு வகைகளை பார்வையிட்டு கலைஞர்களோடு ஆடி மகிழ்ந்தார்.

செம்பொழில்:இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினைப் பொருட்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, பானை அடித்தல், இளவட்டக்கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

செம்பொழில் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக காங்கேயம், புலிக்குளம், மலை மாடு, உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர் உள்ளிட்ட 20 வகையான நாட்டு மாடுகளும். கன்னி, சிப்பிப் பாறை, ராஜபாளையம் என 6 வகையான நாய்களும், மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, வெம்பூர் உள்ளிட்ட 13 வகையான ஆடுகள், மூன்று வகையான கோழிகள், அதேபோல மூன்று வகையான குதிரை உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தப்பாட்டம், சிலம்பாட்டம், அரிவாள் ஆட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துச் சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க:புதிய அணியுடன் ஐரோப்பிய கார் பந்தயத்தில் களமிறங்கும் அஜித்... வைரலாகும் மாஸ் செல்ஃபி வீடியோ!

இந்த விழாவினை தொடங்கி வைத்த நடிகர் கார்த்தி விழா மேடையில் பேசுகையில், “சென்னையில் இதுபோன்ற திருவிழா நடந்து மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கரோனாவிற்குப் பிறகு அனைவரையும் ஒன்று சேர்ப்பது மிக கடினமான ஒன்றாக மாறிவிட்டது என கூறினார். மேலும், சென்னையில் தான் நுகர்வோர்கள் அதிகமாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் எட்டு கோடி பேர் இருந்தார்கள் என்றால், 2 கோடி பேர் சென்னையில் தான் உள்ளனர். எனவே, அவர்களுக்கு இதுபோன்ற திருவிழாக்களில் கண்முன் இருக்க வேண்டும் என நினைத்தோம். பலவகையான அரிசி வகைகள் உள்ளன. இப்படி தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இது போன்ற விழாக்கள் தேவைப்பட்டது.

மக்களுக்காக, குழந்தைகளுக்காக இதுபோன்ற விழாக்களை ஒருங்கிணைத்த இந்த குழுவிற்கும் நன்றி. சென்னையில் இப்படி ஒரு திருவிழா நடப்பது மிக அரிது. என்னுடைய குடும்பத்தாரையும். குழந்தைகளையும் இங்கு வரவழைக்க உள்ளேன். கிராமத்தில் நடைபெறும் விழாக்களை நம் குடும்பத்துடன் சென்று காண்பது அரிதான ஒன்றாக மாறிவிட்டது. எனவே, சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் குடும்பத்துடன் அனைவரையும் வந்து கண்டு களியுங்கள் என்றார்.

சென்னையில் ஜல்லிக்கட்டு:தொடர்ந்து பேசிய அவர், “ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் மாட்டை காயப்படுத்துவார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு என்பது ஏறு தழுவுதல், மாட்டோடு விளையாடுவார்கள், மெய்யழகன் படப்பிடிப்பின் போது ஜல்லிக்கட்டை நேரில் பார்த்து ரசித்தேன்.

சென்னையில் உங்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, அதற்கு பல உரிமைகளை வாங்க வேண்டி உள்ளது. ஆனால் அப்படி ஒன்று நடந்தால், சென்னையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் தன்னுடைய காளை பங்கேற்க வேண்டும்" என பலரும் நினைப்பார்கள் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details