சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்தவர் கவிக்குமார் (24). இவர் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு கறம்பக்குடி காவல் நிலையத்தில் மோசடி பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் இவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்காகத் தேடி வந்தனர். ஆனால் கவிக்குமார் போலீசில் சிக்காமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடித் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கவிக்குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். மேலும், கவிக்குமார் மீது அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது.
இந்நிலையில் அபுதாபியிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்றிரவு(ஏப்.19) வந்தது. அதில், வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்து, வெளியில் அனுப்பிக் கொண்டு இருந்தனர்.