சென்னை:புது வண்ணாரப்பேட்டையச் சேர்ந்த குணசுந்தரியின் கணவர் இறந்தநிலையில் ஆந்திராவைச் சேர்ந்த டேஞ்சர் டேவிட் என்பவரைக் காதலித்து இரண்டாவதாக மணமுடித்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட டேவிட், கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட தகாராறில் குணசுந்தரியையும், அவரது 7 வயது மகனையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த குணசுந்தரியின் தாயார் நாகவள்ளியையும் தாக்கி காயப்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, டேவிட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை சென்ட்ரல் அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.