தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விண்கல் விழுந்ததா? ஏலியன்களின் சதியா? திருப்பத்தூரில் ஏற்பட்ட மர்ம பள்ளத்தால் மக்கள் பீதி! - Mystery PIT IN TIRUPATHUR - MYSTERY PIT IN TIRUPATHUR

Mystery pit in Tirupathur: திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் பகுதியில், மர்ம பொருள் விழுந்து ஐந்து அடி அளவிலான பள்ளம் தோன்றியுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், இந்த பள்ளம் குறித்து ஆய்வு செய்ய, விரைவாக ஒரு அறிவியல் ஆய்வாளரை அனுப்புவதாக தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

மர்ம பொருளால் ஏற்பட்ட பள்ளம்
மர்ம பொருளால் ஏற்பட்ட பள்ளம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 11:50 AM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அருகே ராஜி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது. அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார். ஆனால் ஏதோ சாதாரண பள்ளம் என்று நினைத்து விட்டுவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் திருமலை மீண்டும் அதே இடத்திற்கு சென்று அந்தப் பள்ளத்தை பார்க்கும்போது, அந்த பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனலை உணர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களிடம் கூறிய போது, இந்த ஏன் இந்த பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தை ஏற்படுத்திய மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் பீதி அடைந்தனர்.

இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், அந்த பள்ளத்தில் இருந்த மண் மற்றும் சாம்பலின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். ஆய்வுக்கு பின்னரே விழுந்த மர்ம பொருள் விண்கல்லா? அல்லது ஏதேனும் இடி விழுந்து இந்தப் பள்ளம் ஏற்பட்டதா? என்பது தெரியவரும் என வருவாய் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார்.

மேலும், இந்த பள்ளத்தை முதலில் பார்த்தவர் யார்? யாருக்கு சொந்தமான இடம்? எனவும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் முனியப்பனிடம் இந்த பள்ளத்தை சுற்றி வேலி போட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தற்போது பள்ளத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் பகுதியில் மர்ம பொருள் ஒன்று விழுந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் வந்து பார்த்தோம். அந்த பொருள் குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. தமிழ்நாடு அறிவியல் நொழில்நுட்ப மையத்தின் இயக்குநரிடம் பேசியுள்ளோம்.

அவர் இது குறித்து ஆய்வு செய்ய விரைவாக ஒரு அறிவியல் ஆய்வாளரை இங்கு அனுப்புவதாக கூறியுள்ளார். மேலும் விரைவாக ஆய்வு செய்து, அடுத்தக்கட்ட தகவல்களை வெளியிடுவதாகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், பொது மக்கள் யாரும் இது குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேனி பாலக்கோம்பை பகுதியில் கிராவல் மணல் கடத்தல்.. நில உரிமையாளர் ஆட்சியரிடம் மனு! - Sand Theft In Theni

ABOUT THE AUTHOR

...view details