தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Air Show 2024: ஆகாயத்தில் நிகழ்ந்த அதிசயம்.. மெரினாவில் அலை அலையாய் திரண்டு கண்டுகளித்த மக்கள்! - Chennai Air Show

சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படை வீரர்களின் வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட சென்னை மட்டும் அல்லாது வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பார்வையாளர்கள் தங்களது குடும்பத்துடன் சென்னை மெரினாவில் குவிந்தனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்துள்ள மக்கள்
வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்துள்ள மக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக்.06) காலை 11 மணி அளவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த சாகச விமானங்கள் காலை 10:30 மணியளவில் தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்த்தின. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 விமானங்கள் பங்கேற்றன. விமானப் படையின் விமான சாகசம் கடந்த 2003ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிலையில் 21 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

பொதுவாக இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் டெல்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இந்திய விமானப் படை தனது சாகச நிகழ்ச்சியை நடத்த சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான கடந்த மூன்று நாட்களாக பல்வேறு ஒத்திகை நிகழ்வு அக்டோபர் 4 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர் (ALH), தேஜஸ் போர் விமானம், மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்டவை பங்கேற்றன.

இதையும் படிங்க:AIR Show பார்க்க மெரினா போறீங்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இதற்கிடையே, இந்திய விமானப் படை வீரர்கள் விண்ணில் நிகழ்த்திய சாகசங்களை நேரடியாக காண்பதற்கு, சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஏற்கனவே இந்திய விமானப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் அலை அலையாய் மெரினா கடற்கரையில் குவிந்தனர். மேலும், சென்னை மட்டும் அல்லாது வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் விமானப் படை வீரர்களின் வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட ஆர்வமுடன் வருகை புரிந்தனர்.

இதுமட்டும் அல்லாது, இந்த விமானப்படை வான் சாகசங்கள் நிகழ்ச்சியை, ஈ.சி.ஆர் - கோவளம் கடற்கரையில் இருந்து INS அடையாறு வரை மக்கள் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே இந்திய விமானப் படை வீரர்களின் மெய்சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சிகளை வியப்புடன் கண்ட ரசித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details