திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றித்ததிற்கு உட்பட்ட ஏலாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு கொல்லை கிராமத்தில், கடந்த ஆண்டு கட்டப்பட்ட சக்தி மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் 31ஆம் தேதி பந்தக்கால் நடவு செய்யப்பட்டு 11 நாட்கள் தொடர்ச்சியாக திருவிழா நடைபெற்றது. அதற்காக, பக்தர்கள் பலர் காப்பு கட்டி விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தனர். இந்த நிலையில், நிறைவு நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அப்போது, காட்டு கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மோனிஷ் (7) என்பவர் தீக்குழி இறங்கினார். அப்போது, நிலை தடுமாறிய சிறுவன் தீக்குழியில் தவறி விழுந்துள்ளார். அதனை அடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உடனடியாக சிறுவனை மீட்டனர்.