தமிழ்நாடு

tamil nadu

முழு கொள்ளளவை நெருங்கும் மஞ்சளாறு அணை.. விநாடிக்கு 50 கன அடி நீர் வெளியேற்றம்.. விவசாயிகள் மகிழ்ச்சி..! - Manjalar Dam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 1:51 PM IST

Manjalar Dam Nearing Full Capacity: மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் 50 கன அடி உபரி நீரை மஞ்சளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணை
மஞ்சளாறு அணை (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் அவ்வப்போது பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 42 அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே மஞ்சளாற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் நேற்று (ஆக.11) மாலை முதல் நள்ளிரவு வரை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர் வரத்து 50 கன அடியாக வந்துகொண்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, மஞ்சளாறு அணையில் இருந்து வரும் 50 கன அடி உபரி நீரை மஞ்சளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மஞ்சளாறு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் நீரை நிரப்பும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

மீண்டும் மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மஞ்சளாறு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுமட்டும் அல்லாது, தற்பொழுது அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும், மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது மஞ்சளாறு அணையின் நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதற்கிடையே, மஞ்சளாறு அணைப் பகுதியில் சுமார் 4 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. ஆகவே, மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், அணைக்கு நீர் வரத்து 50 கன அடியாக அதிகரித்து அதனை முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் களைகட்டிய மீன்பிடி திருவிழா.. போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details