தேனி:தேனி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் என்ற இளைஞர், 15 வயது சிறுவன் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவரை அடித்து கொடுமைப்படுத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார். அப்போது, அவரிடம் இருந்து தப்பிய சிறுவன், தனக்கு நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுவனது பெற்றோர் கம்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கணேசன் முன்பு இன்று (ஜன.31) விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியங்களின் அடிப்படையில் இளைஞர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவரை குற்றவாளி எனத் தீர்மானித்து, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.