ஐதராபாத்:போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதன்கிழமை சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். கால்பந்து விளையாட்டில் தனது அனுபவங்கள், வரலாற்றில் இடம் பிடித்தது உள்ளிட்ட தனது கதைகளை அதில் பதிவிடத் தொடங்கி உள்ளார். இந்நிலையில், அவர் யூடுயூப் சேனல் தொடங்கிய 90 நிமிடத்தில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் அவரது சேனலை சப்ஸ்கிரைப் செய்து உள்ளனர்.
இதன் மூலம் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் பெற்ற முதல் நபர் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார். தற்போது வரை அவரது யூடியூப் சேனலை 14.4 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்து உள்ளனர். இதன் மூலம் சேனல் தொடங்கிய ஒரு நாளுக்குள் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் நபர் என்ற புது மைல்கல்லையும் ரொனால்டோ படைத்துள்ளார்.
முன்னதாக தான் யூடியூப் சேனல் தொடங்க உள்ளது குறித்து கிறிஸ்டியானா ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவில் "காத்திருந்தது போதும், எனது யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுவிட்டது. அனைவரும் எனது புதிய பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள்" என்று ரொனால்டோ பதிவிட்டு இருந்தார்.