புதுடெல்லி:டெல்லியை போல, நாட்டின் வேறு எந்த நகரமும் பொதுமக்களின் கற்பனையில் ஆதிக்கம் செலுத்தவில்லை. டெல்லியின் சட்டமன்றத் தேர்தல் மிகுந்த போட்டியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதற்கு இதுவே காரணம். பிப்ரவரி 5ம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் டெல்லி அரசியலில் பல அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களும் சிறைக்கு சென்ற வினோதமான விஷயங்களும் நடந்தேறியுள்ளன.
மாநிலத்தின் அதிகாரத்தை தக்க வைக்க ஆளும் மாநில அரசும், கைப்பற்ற மத்திய அரசும் போட்டி போடுகின்றன. இதனால் ஏற்பட்ட அரசியல் அதிர்வுகளை அடுத்து பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் வெற்றியை நோக்கி தீவிரமாக களமிறங்கியுள்ளன.
முக்கிய தேர்தல்
நீண்ட ஆண்டுகள் கழித்தது முதன்முறையாக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற நினைக்கும் தேர்தலாக இது இருக்கும். அந்த வகையில், மற்ற கட்சிகளை விட ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லியை கைப்பற்றலாம்.
தலைநகர் டெல்லியில் இருந்து வரும் செய்திகள் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை கவனிக்கும் போது இங்கு நடக்கும் தேர்தல்கள் மற்ற மாநிலங்களை விட எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது. 33 மில்லியன் மக்கள்தொகை கொண்ட டெல்லியில்15.6 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். இது மிகப் பெரியதாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கின்றனர். உதாரணமாக, கரோல் பாக்கில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
சித்தரஞ்சன் பூங்காவில் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து அதிக மக்கள் உள்ளனர். அதேசமயம் கிழக்கு டெல்லியில் பெரும்பாலும் உத்தரகாண்ட் மக்கள் உள்ளனர். டெல்லி மக்கள்தொகையில் இங்கு வசிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. ஆனால், பெரும்பாலும் அவர்கள் அவரவர் மாநிலங்களில் வாக்களிப்பவர்களாக உள்ளனர். இருப்பினும், மாநிலத்தில் வர்த்தக பங்கிற்கு அவர்களது பங்களிப்பு அதிகம்.
தேர்தலுக்கு ஏற்பமுடிவைமாற்றும் டெல்லி வாக்காளர்கள்
இப்படி ஒரு மக்கள்தொகையை கொண்டுள்ள டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் வெவ்வேறு விதமாக ஏன் மக்கள் வாக்களிக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்சி மாநில தேர்தலுக்கு உகந்தது என்றால் தேசிய தேர்தலுக்கு சரிப்பட்டு வராதா? டெல்லி மக்கள் சட்டமன்ற தேர்தலுக்கு கொடுக்கும் ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏன் கொடுக்க மறுக்கின்றனர்?.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து டெல்லியில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி டெல்லி சட்டசபையில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது. இந்த கதை பிப்ரவரி 5 ஆம் தேதி மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது. அத்துடன், பாஜகவின் சூழ்ச்சிகளால் துன்புறுத்தப்பட்ட ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலில் இந்த விவகாரம் கைகொடுக்கும்.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்
பாஜக மற்றும் காங்கிரஸைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த காலத்தில் கிடைத்த வாக்குகள் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், ஆம் ஆத்மி 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவை இந்த தேர்தலில் பெறும். காங்கிரஸ் 4 சதவீத வாக்குகளை பெறும். பாஜகவுக்கு 30 சதவீத வாக்குகள் கிடைக்கும்.