தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வீட்டில் கரையான் தொல்லையா? உப்பு இருந்தால் ஒரே வாரத்தில் அழித்துவிடலாம்..ட்ரை பண்ணுங்க! - TIPS TO GET RID OF TERMITES

எலுமிச்சை சாறு மற்றும் வினிகரை சம அளவில் கலந்து கரையான் படர்ந்திருக்கும் இடங்களில் தெளித்து வந்தால் ஒரே மாதத்தில் வீட்டில் கரையான் பிரச்சனை நீங்கும். இது போன்ற டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 25, 2024, 4:24 PM IST

எறும்பு, கரப்பான் பூச்சி, எலி, பல்லி வரிசையில் வீடுகளை சேதப்படுத்துவதில் கரையானுக்கும் முக்கிய பங்கு உண்டு. புத்தகங்களை அரிப்பதில் தொடங்கி மரப்பெருட்களை அரித்து உங்கள் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் கரையான் சேதப்படுத்துகிறதா? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக கரையானை எப்படி அழிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

உப்பு: ஈரப்பதமான இடங்கள் கரையான் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் சுறுசுறுப்பாகவும், கரையான் இனபெருக்கம் செய்யும் காலமாக அமைகிறது. இந்நிலையில், உங்கள் வீட்டில் கரையான் தொல்லை இருந்தால், அந்த இடங்களில் உப்பு தூவி விடுங்கள். இல்லையென்றால், நீரில் உப்பு கலந்து கரையான் இருக்கும் இடங்களில் தெளித்து விடுவது நல்ல தீர்வாக இருக்கும்.

எலுமிச்சை, வினிகர் ஸ்ப்ரே: ஒரு ஸ்ப்ரே பாட்டிலில், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் வினிகர் மற்றும் 1 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கலக்கவும். இப்போது, இதை கரையான் இருக்கும் இடங்களில் வாரத்திற்கு மூன்று முறை தெளித்து வர வேண்டும். எலுமிச்சை பழத்தின் நறுமணம் பூச்சிகளுக்கு பிடிக்காது என்பதால், கரையான் வீட்டிலிருந்து முற்றிலுமாக ஓடிவிடும்.

கிராம்பு:ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுடன், 5 முதல் 8 கிராம்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் நிறம் மாறி நன்கு கொதித்து வந்ததும், அடுப்பை அணைத்து தண்ணீரை ஆற விடுங்கள். பின்னர், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த தண்ணீரை ஊற்றி கரையான் இருக்கும் இடத்தில் அடிக்கடி தெளித்து வருவதால் கரையான் தொல்லை நீங்கும்.

இதையும் படிங்க:உங்கள் கிச்சனில் கரப்பான் பூச்சிகள் ஓடி விளையாடுகிறதா? 'இதை' தெளித்தால் மீண்டும் வரவே வராது..!

வேப்ப எண்ணெய்:இயற்கையான பூச்சிக்கொல்லியாக செயல்படும் வேப்ப எண்ணெய்யை கரையான் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதால், உங்கள் வீட்டிலிருந்து ஒரு மாதத்தில் கரையான் முற்றிலுமாக நீங்கும்.

போரிக் அமிலம்:கரையான் இருக்கும் இடங்கள் மற்றும் கரையானால் பாதிக்கப்பட்ட இடங்களில் போரிக் அமில தூளை தூவி விடலாம். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வரும் போது, கரையான் மீண்டும் அந்த இடத்திற்கு வராது.

  • இது தவிர, புதிதாக வீடு கட்டுபவர்கள், அடித்தளம் அமைப்பதற்கு முன்பு கரையான் மருந்துகளை மண்ணில் பயன்படுத்த வேண்டும்.
  • வீட்டு வைத்திய முறைகள் பலனளிக்கவில்லை என்றால், வீட்டில் உள்ள கரையான்களை அழிப்பதற்கு என சில நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களை தொடர்பு கொண்டு கரையான்களை அழிக்க முயற்சி செய்யலாம்.
  • அதுமட்டுமல்லாமல், வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் புத்தகங்களை வெயில் இருக்கும் இடத்தில் பரப்பி வைப்பதன் மூலம், பொருட்களில் இருக்கும் ஈரப்பதம் நீங்குவதோடு கரையான் தொல்லையும் வராது.

இதையும் படிங்க:

உங்கள் வீடு/கடைகளில் உள்ள எலிகளை விரட்ட எருக்கன் செடி போதும்..இப்படி பயன்படுத்தி பாருங்க..!

வீட்டில் பல்லி தொல்லையா? இந்த 5 செடியை வளர்த்தால்..உங்க வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காது!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட நிபுணரிடம் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details