தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. ஜப்பானின் நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு செய்தது என்ன?

நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 3:15 PM IST

அமைதிக்கான நோபல் பரிசு 2024
அமைதிக்கான நோபல் பரிசு 2024 (Credit - @NobelPrize X Page)

ஹைதராபாத்:மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றிய நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் கடந்த நில நாட்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், இலக்கியம், வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ(Nihon Hidankyo) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைய முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க விஞ்ஞானிகள்! ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது என்ன?

மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஹிரோஷிமா(Hiroshima) மற்றும் நாகசாகி(Nagasaki) ஆகிய நகரங்களில் அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை மேம்படுத்துவதற்காகவும், நகரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காகவும் பல்வேறு முயற்சிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலக்கியத்திற்கான நோபல் பரிசை வெல்லும் பெண் எழுத்தாளர்! யார் இந்த ஹேன் காங்?

ABOUT THE AUTHOR

...view details