தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"கொல்லப்படுவோமோ என்ற பயத்துடன் உலவ வேண்டி இருக்கிறது"- தெருக்குரல் அறிவு வேதனை! - Therukural Arivu - THERUKURAL ARIVU

Therukural Arivu: வள்ளியம்மா பேராண்டி இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் பேசிய தெருக்குரல் அறிவு, கலையை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் சமூக மாற்றத்துக்கான கருவியாக பயன்படுத்த வேண்டும் என்றும், என்ஜாய் என்ஜாமி பாடலை பாடும் போது நான் பேச நினைத்தது எனக்கு பிரச்சினையாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

வள்ளியம்மா பேராண்டி இசை ஆல்பம் வெளியீட்டு விழா
வள்ளியம்மா பேராண்டி இசை ஆல்பம் வெளியீட்டு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 8:48 AM IST

சென்னை:தெருக்குரல் அறிவுவின் ‘வள்ளியம்மா பேராண்டி’ முதல் பாகம் இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.‌ ரஞ்சித், ராப் பாடகர் அறிவு, இசையமைப்பாளர் இமான், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் இமான், “தெருக்குரல் அறிவு என்பதை மாற்றும் நேரம் வந்து விட்டது. ஒவ்வொரு பாடலும் நன்றாக இருந்தது. நேற்று போன் பண்ணி சொந்த அண்ணணாக கேட்கிறேன். வாருங்கள் என்று சொன்னார். அதற்காக வந்து விட்டேன்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய பாடகர் அறிவு, “ஆண்டாண்டு காலமாக சாதி எப்படி, இங்கிருக்கும் மனிதர்களிடம் உழைப்பை வாங்கி அந்த மனிதர்களை புறந்தள்ளியதோ, அதே மாதிரி இந்த இசையும் பண்பாடும் எளிய மக்களின் வாழ்வியலையும், விழுமியங்களையும் புறந்தள்ளுகிறது. நாம் வேரற்ற மனிதர்களானால் எளிதில் வெட்டி வீழ்த்தப்படுவோம். எனக்கு இந்த அனுபவம் இருந்தது என்ஜாய் என்ஜாமி பாடலை பாடும் போது நான் பேச நினைத்தது எனக்கு பிரச்சினையாக இருந்தது.

இந்த சாதியில் பிறந்ததால் உனக்கு படிப்பு வராது என்று சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கு அவ்வளவு கோபமாக வந்தது ஏன் அப்படி சொன்னார்கள் என்று இருந்தது. கலையை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் சமூக மாற்றத்துக்கான கருவியாக பயன்படுத்த வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். ரொம்ப ஆபத்தான வன்முறை நிறைந்த சமூகத்தில் நாம் இருக்கிறோம்.

ஒருவேளை நாளை கொல்லப்படுகிற ஆள் நான் ஆகவோ அல்லது எனக்கு தெரிந்த நபராகவோ இருக்குமோ என்ற பயத்துடன் உலவ வேண்டியதாக இருக்கிறது. அப்படியான நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.‌ நாம் எந்த தவறும் செய்யாதவர்கள். ஒட்டுமொத்த உலகத்தையும் நேசிக்கும் பேராண்மை கொண்ட மக்கள், நம் மாண்பை மீட்டெடுப்போம்” என்று பேசினார்.

இதையும் படிங்க:எஞ்சாயி என்ஜாமி பாடலால் அறிவு பல பிரச்னைகளைச் சந்தித்தார்.. மனம் திறந்த பா.ரஞ்சித்! - enjoy enjaami song

ABOUT THE AUTHOR

...view details