தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இளையராஜாவை சமாளித்து படம் எடுத்தாரா? - இயக்குநர் பாக்யராஜ் கூறுவது என்ன? - director bhagyaraj about ilayaraja - DIRECTOR BHAGYARAJ ABOUT ILAYARAJA

Director K Bhagyaraj: இயக்குநர் பாக்யராஜ் இளையராஜாவைச் சமாளித்து முந்தானை முடிச்சு படத்திற்கு இசையமைத்தோம் என டி.இராமானுஜம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசினார்.

இயக்குநர் பாக்யராஜ் புகைப்படம்
இயக்குநர் பாக்யராஜ் புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 10:13 PM IST

பாக்யராஜ் பேசிய வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திரையுலகின் தந்தை டி.இராமானுஜம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

மேலும், இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், கே.ஆர் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ராஜன், சத்யஜோதி தியாகராஜன், தேனாண்டாள் முரளி, நடிகர் நாசர், திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், "டி.இராமானுஜம் முடிந்தவரை கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பார். படத்துக்கான பூஜை போடும் போது, இடையில் வேறொரு தயாரிப்பாளர் தங்களுக்கு படம் பண்ண வேண்டும் என்று பெரிய தொகையை ஒரே தடவையில் கொடுத்ததாகவும், ஆனால் டி.இராமானுஜத்துக்கு படம் பண்ணுவதாக வாக்கு கொடுத்து விட்டேன் என்று சொன்னேன்.

இதைக் கேட்டு டி.இராமானுஜம், உடனே நீங்கள் அந்தப் படத்தை முடித்து விட்டு எங்கள் படத்தை பண்ணுங்க என்று சொன்னார். வார்த்தை கொடுப்பது பெரிதல்ல. அதைக் காப்பாற்ற நினைக்கும் போது எனக்கு வேறு சில சூழ்நிலை வந்து விடுகிறது.‌

மேலும், ஒரு பெரிய படம் வரும்போது தருகிறேன் என கங்கை அமரனிடம் சொன்னேன். பின்னர், ஏவிஎம் தயாரிப்பில் ‘முந்தானை முடிச்சு’ படம் கமிட் ஆனதும், கங்கை அமரனிடம் இந்தப் படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்கணும் என்று சொல்லி வாக்கு கொடுத்தேன்.

ஆனால், தயாரிப்பாளர்களுக்கு முந்தானை முடிச்சு படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். அதன்பின் தான் இளையராஜாவிடம் சென்றோம். அப்போது தான் என்னை முதலில் நீங்கள் கூப்பிடவில்லை, கங்கை அமரனைத் தான் கூப்பிட்டீங்க என்று இளையராஜா கோபித்துக் கொண்டார். பின்னர், அவரை சமாளித்து படம் பண்ணோம்.

டி.ஆரைப் பொறுத்தவரை எதுவாக இருந்தாலும் பார்த்து நிதானமாக செய்வார். புன்னகை அரசி என்றால் கே.ஆர்.விஜயா என்று சொல்வதைப் போல, புன்னகை அரசனாக டி.ராமானுஜத்தை நான் பார்த்திருக்கிறேன். நான் வருவதற்கு முன் என் திறமையை நம்பியவர். சினிமாவுக்கு பல சேவைகளை செய்தவருக்கு இப்படியான விழா எடுப்பது சிறப்பானது" என்று கூறினார்.

இதையும் படிங்க:ஹைதராபாத்தில் அஜித்குமார்? குட் பேட் அக்லி முக்கிய அப்டேட்! - Good Bad Ugly Movie Shot Hyderabad

ABOUT THE AUTHOR

...view details