தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு படுமோசம்" - கொந்தளித்த நடிகர் பார்த்திபன்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் நேற்று பயணம் செய்த நடிகர் பார்த்திபன், தனக்கு வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததாக எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டி உள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

வந்தே பாரத் ரயில், பார்த்திபன்
வந்தே பாரத் ரயில், நடிகர் பார்த்திபன் (Credits - ETV Bharat Tamil Nadu, Parthiban X Page)

சென்னை :சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் (20643) நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் நேற்று பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்குவந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமானதாக இல்லை என்று கூறி, பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்த உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.

நானதில் தொடர்ந்த செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென".. என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவுடன், ரயில்வே நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக அளித்த புகார் படிவத்தையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க :'சூர்யா 45' படத்தின் அப்டேட் வந்தாச்சு.. இயக்குநர் யார் தெரியுமா?

அந்த கடிதத்தில், "உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். ரயில் சுகாதாரமாக இருந்தது. ஆனால், இரவு 7.22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படுமோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிகொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் கமெண்ட் : நடிகர் பார்த்திபனின் பதிவிற்கு பலரும் கமெண்ட் செய்துள்ளனர். நீங்கள் செய்தது சரி தான். பொதுமக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் யாராவது ஒருவர் முன்வர வேண்டும். அதை நீங்கள் அற்புதமாக செய்திருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ரயில்வே நிர்வாகம் வருத்தம் :உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். உணவு சேவை குறைபாடு குறித்து சம்பந்தப்பட்ட உரிமைதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பார்த்திபனின் பதிவிற்கு சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details