தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அடேங்கப்பா! மதுரை மல்லி விலை கிலோ இவ்வளவா? பூக்களின் விலை நிலவரம் என்ன? - FLOWER PRICE TODAY

மார்கழி மாதம் மற்றும் திருக்கார்த்திகையை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தையில் மதுரை மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளதால் இன்றைய நிலவரப்படி கிலோ ரூ.500 உயர்ந்து ரூ.2500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மல்லிகை பூக்கள், ரோஜா பூக்கள்
மதுரை மல்லிகை பூக்கள், ரோஜா பூக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2024, 7:37 PM IST

மதுரை:மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர், விராதனூர், நெடுங்குளம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் மதுரை மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற அண்டை மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில், திருக்கார்த்திகையை முன்னிட்டு அண்மையில் பூக்களின் விலைநிலவரம் தொடர் ஏற்றம் கண்டிருந்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளதால் மலர் சந்தைக்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.

குறிப்பாக, நேற்றைய நிலவரப்படி மதுரை மல்லிகை கிலோ ரூ.2000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பட்டன் ரோஜா பூக்கள் (ETV Bharat Tamil Nadu)
  • மெட்ராஸ் மல்லிகை ரூ.700
  • பிச்சி பூ ரூ.1000
  • முல்லை பூ ரூ.800
  • செவ்வந்தி பூ ரூ.180
  • சம்பங்கி பூ ரூ.200
  • செண்டு மல்லி ரூ.100
  • கனகாம்பரம் ரூ.1,000
  • ரோஜா ரூ.250
  • பட்டன் ரோஜா ரூ.300
  • பன்னீர் ரோஜா ரூ.300
  • கோழிக்கொண்டை ரூ.120
  • அரளி ரூ.600, தாமரை (ஒன்று) ரூ.25

என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நல்ல நாட்கள் வரும் நிலையில் விலை உயர்வை கண்டு மக்களை பெரும் கவலையடைந்துள்ளனர்.

மதுரை மல்லிகை பூக்கள் விற்பனை (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:ஹைப்பர்லூப் ரயில் டிராக் ரெடி? கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வேகம்!

இது குறித்து, மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், “கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மல்லிகை பூ கிடைக்காமல் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். இந்த மார்கழி மாதம் முழுவதும் இதே விலை நிலவரம் நீடிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details