கேரளா:கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளராகக் களம் கண்ட பிரியங்கா காந்தி வத்ரா காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னிலை வகித்து வந்தார்.
முன்னதாக, வயநாடு மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வேட்பாளராக களம் கண்டு, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் ரேபரேலி மக்களவைத் தொகுதி எம்.பியாக பொறுப்பெற்ற நிலையில் வயநாடு தொகுதியில் எம்.பியாக பொறுப்பெற்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காலை 8 மணியளவில் மின்னஞ்சல் வாக்குகளில் இருந்து வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியது. அதிலிருந்து பல்வேறு கட்ட வாக்கு எண்ணிகை சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின், காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா 1,21,476 வாக்குகள் பெற்று, 85,533 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ சத்யன் மொகேரியை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்தார்.
இதையும் படிங்க:கர்நாடகா இடைத்தேர்தல்: மூன்றில் இரண்டு தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை!