தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 1:21 PM IST

ETV Bharat / bharat

பிரதமர் மோடி, அமித்ஷா பதவியேற்பு! தர்மேந்திர பிரதான் பதவியேற்பில் எதிர்க்கட்சிகள் கூச்சல்! - Lok Sabha Session 2024

18வது மக்களவை கூட்டத் தொடரின் முதல் நாளில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

Etv Bharat
Leaders take oath as Members of Parliament. (Photo/ANI)

டெல்லி: 18வது மக்களவை கூட்டத் தொடர் இன்று (ஜூன்) கூடியது. முன்னதாக தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாபுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எம்பிக்கள் பதவியேற்பு விழா நடந்தது. தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிதமர் மோடி முதல் ஆளாக வந்த பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோருக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, சிராக் பஸ்வான், கிரன் ரிஜிஜூ, நிதின் கட்காரி, மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் யாதவ், கிரிராஜ் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத், பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான், ஐக்கிய ஜனதா தளம் எம்பி ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனிடையே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்றுக் கொண்ட போது நீட் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியினரின் முழக்கங்களுக்கு மத்தியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக மக்களவை கூட்டத் தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று பெருமைக்குரிய நாள், சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக புதிய நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாண விழா நடைபெறுகிறது. முன்னர் பதவிப் பிரமாணம் பழைய நாடாளுமன்றத்தில் நடந்தது.

இந்த முக்கியமான நாளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் மனதார வரவேற்கிறேன், அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்று கூறினார். மேலும், மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான அட்சி அமைய வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டு வாய்ப்பளித்து அதரவு தரும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

புதிதாக அமைந்துள்ள நாடாளுமன்றம் சாதாரண மனிதனின் தீர்மானங்களை நிறைவேற்றக் கூடிய மையமாக விளங்கும், மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது நாடு புது உத்வேகத்துடன் புதிய உயரத்தை அடைய ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை கட்டமைக்கும் முதல் படியாக 18வது மக்களவை கூட்டம் தொடங்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவை தேர்தலில் 65 கோடி வாக்களர்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அரசின் மீது மக்கள் கொண்டு இருந்த நம்பிக்கையின் பிரதலிப்பாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பளித்து இருப்பதை எண்ணுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து நாளையும் (ஜூன்.25) எம்.பிக்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அதன்பின் ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:"எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு... ஜனநாயகத்தின் கரும்புள்ளி"- பிரதமர் மோடி! - Lok Sabhe session 2024

ABOUT THE AUTHOR

...view details