Video: நிலத் தகராறில் மொட்டை மாடியில் நின்று துப்பாக்கிச் சூடு: பெண் காயம் - மத்திய பிரதேசத்தின் ரெஹாட் சாராய் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 30, 2022, 7:58 PM IST

மத்தியப் பிரதேசத்தின் ரெஹாட் சாராய் கிராமத்தில், சத்ரபால் பாகேல் என்பவருக்கும், அவரது உறவினரான ஹக்கீம் சிங் பாகேல் என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்த நிலத்தில் சத்ரபால் பாகேல் இன்று (ஏப்ரல் 30) பள்ளம் தோண்டிகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஹக்கிம் சிங் பாகேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது மகனுடன் மொட்டை மாடிக்கு சென்ற ஹக்கிம் சிங் பாகேல், தந்தை, மகன் இருவரும் சேர்ந்து மொட்டை மாடியில் நின்றபடி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சத்ரபாலின் மனைவி மீனா முதுகில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.