செங்கரும்பு மூலம் உருவாக்கப்பட்ட பானையில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் சுமார் ஒன்றரை டன் எடையுள்ள செங்கரும்பை கொண்டு 15 அடி உயரம், 13 அடி அகலத்தில் பொங்கல் பானையை வடிவமைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். விவசாயிகளின் சிறப்பை விளக்கும் வகையில், இப்படி கொண்டாடியதாக அவர் தெரிவித்தார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.